

இன்றைய நவீன உலகில் AI தொழில்நுட்பமானது தொழில் துறையில் மாத்திரமின்றி அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்துகின்ற நிலையில், இதன் மூலம் சாதகமான மற்றும் பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன.
அந்த வகையில், எதிர்கால சமுதாயமான இன்றைய மாணவர்கள் தொழில்துறையை நோக்கி செல்லும் போது, அவர்களுக்கு தேவையான தொழில்துறை அறிவு மாத்திரமின்றி மேலதிகமாக AI தொழில்நுட்ப அறிவுக்கான தேவை எதிர்காலத்தில் ஏற்படும். இதனை மாணவர்களுடைய பாடசாலை காலத்திலேயே வழங்குவதன் ஊடாக அல்லது அவர்களிடையே அறிமுகப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் AI மீதான ஆர்வத்தை தூண்ட முடியும் என்ற நோக்குடன் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மாணவர்களுக்கு AI தொடர்பிலான ஆர்வத்தை தூண்டுவதற்கும் அதனை அவர்களிடையே அறிமுகப்படுத்துவதற்கும் ஆசிரியர்கள் AI தொடர்பிலான அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக 11.03.2026 அன்று “AI for Teachers” என்ற தலைப்பில் AI தொடர்பிலான செயலமர்வு களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பட்டிருப்பு வலய பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் திரு. R. J. Roshan Joel அவர்கள் கலந்துகொண்டு செயலமர்வை நடாத்தினார்.
இதன்போது AI ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கின்றது, AI இல் உள்ள Tools-களை எவ்வாறு பயன்படுத்துவது, அதன் பயன்கள் என்பன கற்பிக்கப்பட்டன.
இதில் 30 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டு AI தொடர்பிலான பயிற்சிகளை பெற்றதுடன், அது தொடர்பிலான செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.





QUARTERLY DIGITAL PERFORMANCE REPORT சமர்ப்பிப்பு மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் டிஜிட்டல் மற்றும் சமூக மேம்பாட்டுச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் நோக்கில் QUARTERLY DIGITAL PERFORMANCE REPORT சமர்ப்பிப்பு மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு 13.06.2026 சனிக்கிழமை Glamant Lagoon Hotel இல் நடைபெற்றது.
இந்நிகழ்வில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு கிளை மற்றும் கொம்மாதுறை கிளையின் Performance Report, காரைதீவு சமுதாயக் கல்லூரியின் Performance Report மற்றும் அமிர்தா நிறுவனத்தின் Performance Report ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவற்றின் தற்போதைய முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் அடைந்துள்ள பெறுபேறுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து திட்டங்களின் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கான செயற்றிட்டங்கள் மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் அவர்கள் கல்லூரியின் ஊழியர்களுக்கு தேவையான சிறப்புப் பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் செயற்றிட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா, கல்லூரியின் முதல்வர் திரு. த. சந்திரசேகரம், கல்லூரியின் பயிற்றுவிப்பாளர்கள், அமிர்தா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய செயற்றிட்டங்களில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
திட்டமிடல், மதிப்பீடு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப தரமான சேவைகளை வழங்குவதில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



